சுமந்திரனின் கருத்துக்களை நான் இன்னமும் முழுமையாகப் பார்க்கவில்லை.

“சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்களை நான் இன்னமும் முழுமையாகப் பார்க்கவில்லை. எனினும், அவரின் தனிப்பட்ட செவ்வியை – அவரின் சொந்தக் கருத்துக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகவோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கருத்தாகவோ எவரும் எடுத்துக்கொள்ளக்கூடாது.”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.ஏ.சுமந்திரன், தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவரின் சொந்தக்கருத்து தனிப்பட்ட கருத்து. அதைக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகவோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கருத்தாகவோ எவரும் எடுத்துக்கொள்ளக் கூடாது எனக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் வழங்கிய சர்ச்சைக்குரிய செவ்வி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.