சுந்தரம் அருமைநாயகம் இராஜாங்க அமைச்சின் செயலாளராக பதவியேற்பு

கிளிநொச்சி மாவட்டச் செயலாளரும் நிர்வாக சேவை மூத்த அதிகாரியுமான சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.

இராஜாங்க அமைச்சின் செயலாளர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதியானால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு கடந்த வாரம் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது,
ஜனாதிபதி செயலகத்தினால் நேற்று இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது. நாளை இந்த இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த பதவியேற்பிற்காக சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கெஹெலிய ரம்புக்வெலவின் அமைச்சான முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சிற்கே இவர் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார். முன்னர் இவர் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் செயலாளராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு மாற்றம் வழங்குமாறு கோரியுள்ளதாகவும், இருந்தாலும் இந்த நியமனம் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமையவே வழங்கப்படும் என்றும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.