சுகாதார, சமூக பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக 66 மில்லியன் ரூபா நிதி

கடந்த இரண்டு தினங்களில் சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு 66 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் 314 மில்லியன் ரூபாவாக காணப்பட்ட பராமரிப்பு நிதி 380 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அமைச்சர் டளஸ் அலஹப்பெரும தமது ஏப்ரல் மாத கொடுப்பனவை வழங்கியுள்ளதோடு அமைச்சர் காமினி லொக்குகே 10 மில்லியன் ரூபாவும் நேற்று இரவு வழங்கியுள்ளார்.

இது தவிர தனியார் மற்றும் சில அரச அமைப்புகள் ஊடாக கொவிட்-19 தொற்றை கட்டுபடுத்த நிதி வழங்கப்பட்டு வருகின்றன.