சிறைச்சாலைகளில் புலனாய்வுப் பிரிவொன்றை அமைப்பது பற்றி ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக சிறைச்சாலைகளில் பயனுள்ள நிர்வாகம் மற்றும் ஒழுக்கத்தை பேணும் நோக்கில் இந்த அமைப்பை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்தார். இவர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.