சிறீலங்கா அரசின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

சிறீலங்கா அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் பொது நிர்வாக அமைச்சு ஆகிய திணைக்களங்களின் இணையத்தளங்கள் மீது நேற்று (30) இனந்தெரியாதவர்கள் சைபர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சிறீலங்கா வன்படையின் சைபர் பாதுகாப்பு தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பில் வான்படையினர் குறிப்பிட்ட திணைக்களங்களுக்கு தெரிவித்துள்ளதுடன், கணணி அவசர நடவடிக்கை பிரிவினர் இணையத்தளங்களை மீண்டும் சீர்செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.