சிறீலங்காவில் 500 படையினருக்கு கொரோனா – வான் போக்குவரத்து தொடர்ந்து நிறுத்தம்

சிறீலங்காவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களில் 500 பேர் முப்படைகளையும் சேர்ந்தவர்கள் என கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதுவரையில் அங்கு பாதிக்கப்பட்ட 889 பேரில் ஏறத்தாள 500 பேர் படையினர்.

அவர்களில் 454 கடற்படையினர், 34 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், 11 பேர் இராணுவம் மற்றும் வான்படையை சேர்ந்தவர்கள். இவர்களில் 216 பேர் கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சிறீலங்காவில் இடைநிறுத்தப்பட்டுள்ள பயணிகள் விமான சேவையின் காலஎல்லை இந்த மாதம் 31 ஆம் நாள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.