சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 1,141 அதிகரிப்பு

சிறீலங்காவில் பரவிவரும் கோவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை 1,141 ஆக அதிகரித்துள்ளதாக சிறீலங்கா சுகாதாரத் திணைக்களம் இன்று (25) தெரிவித்துள்ளது.

நேற்று (24) அங்கு 52 புதிய நோயளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 674 பேர் குணமடைந்துள்ளனர். 457 பேர் தற்போதும் வைதியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.