சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் மீது குற்றவியல் விசாரணை

சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னான்டோ மீது ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் அறிக்கையின் பிரகாரம், குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கியுள்ளார்.

தனது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றாததற்காகவே இவருக்கு  எதிராக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தமை தெரிந்ததே.

சிறீலங்கா பிரதமருக்கும் அரச தலைவருக்கும் இடையிலான அதிகாரப் போட்டியினால் புலனாய்வுத் தகவல்கள் புறக்கணிக்கப்பட்டதும், கொழும்பில் தாக்குதல்கள் இடம்பெற்றதும் நாம் அறிந்தவையே. ஆனால் தற்போது அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.