சிறிலங்கா வந்திருந்த இந்திய முப்படைக் குடும்பங்கள்

சிறிலங்கா மலையகப் பகுதிக்கு இந்தியாவின் முப்படையினரின் குடும்ப உறுப்பினர்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, கண்டி தலதா மாளிகை, கேகாலை மாவட்டத்திலுள்ள பின்னவள யானைகள் சரணாலயம் ஆகியவற்றிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த மாதம் 15ஆம் திகதி சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொண்ட இவர்கள் நேற்று முன்தினம் இந்தியா திரும்பினர். அதற்கு முன்னதாக அவர்கள் இந்த விஜயங்களை மேற்கொண்டிருந்தனர்.