Home செய்திகள் சிறிலங்கா பௌத்தத்தை கண்டித்த திபெத் பௌத்தம்

சிறிலங்கா பௌத்தத்தை கண்டித்த திபெத் பௌத்தம்

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்  அண்மையில் முஸ்லீகள் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு  திபெத்திய பௌத்த ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா கடுமையான கண்டத்தை வெளியிட்டிருக்கிறார்.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரான வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் கடந்த 15 ஆம் திகதி முஸ்லிம்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

‘முஸ்லிம்களின் கடைகள், வர்த்தக நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம். அந்தக் கடைகளில் உணவருந்த வேண்டாம். அவர்கள் எம்முடைய சமூகத்தை அழிப்பதை நோக்காகக் கொண்டு செயற்படுகிறார்கள் என்பது வெளிப்பட்டிருக்கிறது.ஆகையால் பௌத்தர்கள் கவனமாக பாதுகாப்புடன் செயற்பட வேண்டும். மேலும் கருக்கலைப்பு செய்த வைத்தியரை கல்லால் அடித்துக்கொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிபிசி ஆங்கில செய்திச்சேவை தலாய்லாமாவுடன் நடத்திய நேர்காணல் ஒன்றின் போது வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரின் கருத்து தொடர்பிலும் வினவியது. அதற்குப் பதிலளித்த திபெத்திய பௌத்த ஆன்மிகத் தலைவரான அவர், முஸ்லிம்கள் குறித்த தேரரின் கருத்தை நிபந்தனைகளின்றி கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

‘இன, மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கின்ற ஒருவர் இத்தகைய கருத்துக்களைக் கூறுவதென்பது முற்றிலும் தவறானதாகும். நாம் ஏனைய பிற சம்பிரதாயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். சமய நம்பிக்கைக்கும், கௌரவத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்’ என்றும் தலாய்லாமா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மேலும் ‘நான் ஒரு பௌத்தன். என்னுடைய முழு நம்பிக்கையும் பௌத்த சமயத்தின் மீதே இருக்கின்றது. இருப்பினும் ஏனைய அனைத்து சம்பிரதாயங்களுக்கும் ஒரேவிதமாக நான் மதிப்பளிக்கிறேன்’ என மேலும் தெரிவித்துள்ளார்.