சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள பெண் வேட்பாளர்

எதிர்வரும் சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக பிரதி சொலிஸ்டர் நாயகம் டில்ருக்ஷி டயஸ் போட்டியிடவுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளராக டில்ருக்ஷி டயஸ் பதவி வகித்ததோடு, அவரது காலப்பகுதியிலேயே கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான அதிகளவு வழக்குகள் விசாரிக்கப்பட்டன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதனால் இவரை பலரும் இரும்புப் பெண் என அழைத்தனர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தமது பிரதி சொலிஸ்டர் பதவியிலிருந்து 20.08 அன்று இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்க்கட்சி சார்பாக இவர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.