சிறிலங்காவின் தமிழ் அமைச்சரை சந்தித்த தென்னாசிய காவல்காரன்

புது டில்லியில் வைத்து சிறிலங்காவின் தமிழ் அமைச்சரான மனோ கணேசனை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

மோடியின் தேர்தல் சுலோகமாக அமைந்தது ”நான் இந்தியாவின் காவல்காரன்” என்பதேயாகும். இதை மனதில் வைத்துக் கொண்டு மனோ கணேசன் மோடியிடம் ”நீங்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல, முழு தென்னாசியாவிற்கும் காவல்காரனாக இருக்க வேண்டும்” என செய்தியாளர்களிடம் கூறியதாக  மனோ கணேசன் தெரிவித்தார்.

நேற்று இரவு (31) மனோ கணேசனை சந்தித்து கைலாகு கொடுத்து பேசும் போது மோடி, இதை ஞாபகப்படுத்திப் பேசியிருந்தார். சிறிலங்கா உட்பட தென்னாசிய அரசியல் தீவிரவாத சூழலில் இது முக்கியத்துவம் பெறுகின்றது எனவும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் தான் நம்புவதாகவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே இந்தியப் பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு, மோடியை சந்தித்து கலந்துரையாடி விட்டு சிறிலங்கா ஜனாதிபதி நேற்று இரவு நாடு திரும்பினார்.

சிறிலங்கா விமான சேவைக்கு சொந்தமான U L 196   விமானத்தில் நாடு திரும்பியிருந்தார்.