யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடாத்தபட்ட ‘யாழ் ஊடக விருது 2019’ வழங்கும் நிகழ்வில் ஏழு பிரிவுகளின் கீழ் ஏழு ஊடகவியலாளர்களுக்கு விருது வழகிகௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வு நிகழ்வு நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் சிறப்புடன் நடைபெற்றது.
அமரர் மயில்வாகனம் நிமலராஜன் ஞாபகர்த்த விருதுஇ நெருக்கடியான சூழலில்அறிக்கையிடல் பணிக்கான விருது மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.அமரர் தராகி சிவராம் ஞாபகார்த்தமாகஇ அர்ப்பணிப்புமிக்க ஊடக சேவைக்கான விருது (வடக்கு) மூத்த ஊடகவியலாளரும் காலைக்கதிர் ஆசிரியருமான நடேசப்பிள்ளை வித்தியாதரனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.அமரர் ஜயாத்துரை நடேசன் ஞாபகார்த்தமாகஇ அர்ப்பணிப்புமிக்க ஊடக சேவைக்கான விருது (கிழக்கு) மூத்த ஊடகவியலாளர் விஸ்வராஜா காந்தகுமாருக்கு (மட்டக்களப்பு) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.அமரர் செல்வராசா ரஜிவர்மன் ஞாபகார்த்தமாகஇ போர்க்கால ஊடகப்பணி மற்றும் தொடரும் ஊடக சேவைக்கான விருது ஊடகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனுக்கு (கிளிநொச்சி) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.அமரர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி ஞாபகார்த்தமாகஇ நெருக்கடிகளிற்கு மத்தியிலான பெண் ஊடகவியலாளராக ஊடகப்பணிக்கான விருது ஊடகவியலாளர் செல்வி.சதாசிவம் சகீலாவுக்கு (முல்லைதீவு) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாகஇ வருடத்தின் சிறந்த செய்தி புகைப்படத்துக்கான விருது நெருக்கடிகள் மத்தியிலான பணியாற்றிய தர்மபாலா திலக்சனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
அமரர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் ஞாபகார்த்தமாகஇ வருடத்தின் சிறந்த பிரதேச செய்தியாளர் விருது சக முஸ்லீம் ஊடகவியலாளரான லாபீருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவ்விருதுகளை வடமாகாண மேல்நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிறேமசங்கர் வழங்கி கௌரவித்திருந்தார்.