சரத் பொன்சேகா குறித்து ஐ.தே.க. வெளியிட்ட செய்தி

சரத் பொன்சேகா அரசியலில் ஈடுபடாதிருந்தால் நல்லதாக இருந்திருக்கும் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசாவை பிரேரிக்குமாறு கோரி குருநாகலில் நாளை நடைபெறவுள்ள பொதுக் கூட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இப்படிக் குறிப்பிட்டார்.

சரத் பொன்சேகா என்ன சொல்கின்றார், என்ன செய்கின்றார் என்பது குறித்து கூறமுடியாதுள்ளது. முன்னர் ராஜபக்ஷக்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார். இப்போது சஜித்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றார். அடுத்து யாரைப் பற்றி பேசுவாரோ தெரியாதுள்ளது.

சரத் பொன்சேகா இராணுவ நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டு அரசியல் செய்யாமல் இருந்தால் சிறந்தது என தற்போது தமக்கு தெரியவருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.