சனிக்கிரகத்தின் நிலவில் ஆய்வு –நாசா

சனிக்கிரகத்தைச் சுற்றி வரும் மிகப் பெரிய நிலவான டைட்டனில் ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு நடத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா திட்டமிட்டுள்ளது.

சனிக்கிரகத்தை சுற்றி வரும் 62 நிலவுகளில் மிகப் பெரிய நிலவான டைட்டனில், ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு மேற்கொள்ள நாசா திட்டமிடட்டுள்ளது.

இதற்காக டைட்டன் நிலவின் பல்வேறு பகுதிகளில் பறந்தும், தரையிறங்கியும் ஆய்வு செய்வதற்கான ட்ராகன் ஃபிளை என்ற ஆளில்லா விமானத்தை நாசா விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

85 கோடி டொலர் (சுமார் 5,850கோடி) செலவில் மேற்கொள்ளப்பட்டு, 2034ஆம் ஆண்டு டைட்டன் நிலவில் தரையிறங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.