சட்டத்தரணி மணிவண்ணிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரின் வீட்டில் வைத்து சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மணிவண்ணணிடம் விசாரணைகளை மேற்கொண்டு அவரிடம் வாக்குமூலத்தையும் பதிவுசெய்துள்ளார்

கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை நடாத்தியிருந்தார் என்பது தொடர்பில் மணிவண்ணணிடம் இந்த விசாரணைகளை பங்கரவாதப் பரிவினர் மேற்கொண்டிருந்ததாகத் தெரிய வருகின்றது.