சஜித் பிரேமதாசாவை களமிறக்க ஐ.தே.க முடிவு – தேர்தலைப் புறக்கணிக்க தமிழ் மக்கள் முடிவு

எதிர்வரும் சிறீலங்கா அரச தலைவர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசா போட்டியிட உள்ளதாகவும், அது தொடர்பில் கட்சி திட்டமிட்டுவருவதாகவும் அமைச்சர் மங்கள சமரவீரா தெரிவித்துள்ளார்.

அரச தலைவர் தேர்தலில் கடந்த பல வருடங்களாக ஐ.தே.கா தோல்வியடைந்து வருகின்றது. எனவே நாம் ஒரு பிரபலமான போட்டியாளரை நிறுத்த வேண்டிய கட்டயத்தில் உள்ளோம் என சமரவீரா தெரிவித்துள்ளதாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெக்டர் அப்புகாமி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் தொடர்பில் பேச்சுக்கள் நடைபெற்று வருகின்றன, அதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஐ.தே.கட்சியோ அல்லது சுதந்திரக் கட்சியோ தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளையும் செய்யவில்லை என்பதுடன், தொடர்ந்து நில ஆக்கிரமிப்பையும், திட்டமிட்ட இன அழிப்பையும் முன்னெடுத்து வருவதால் தமிழ் மக்கள் சிங்கள அரச தலைவருக்கான தேர்தலில் பங்கெடுப்பதை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 10 ஆவது ஆண்டு நிறைவுடன் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசமும் முடிவுக்கு வந்துள்ளதாக தமிழ் மக்கள் எண்ணுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்