கோவிட்-19- லண்டனில் இளம் தமிழ் ஊடகவியலாளர் பலி

கொரோனா தொற்றில் பல தமிழர்களும் அடுத்தடுத்து இறந்து வருகின்ற நிலையில் இலண்டனில் முதல் தமிழ் இளம் ஊடகவியலாளர் ஒருவரும் இன்று ஏப்ரல் 09, 2020 வியாழக்கிழமை பலியாகியுள்ளார்.

இவர் பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதன் அவர்களின் மகன் ஆனந்தவர்ணன் (வயது 30) ஆவார்.

இவர் பூநகரி பிரதேச சபையின் முன்னை நாள் உறுப்பினர் என்பதோடு TTN தமிழ் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராகவும், செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியவர்.

பிரான்சில் குறுகிய காலத்திலேயே நிரந்தர குடியுரிமை பெற்று, நோர்வேயில் வசித்து வந்துள்ள நிலையில் தற்போது அவசிய காரணத்தால் இலண்டன் சென்ற நிலையிலேயே இவர் கொரோனா தொற்றிற்கு இலக்காகி இறந்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற சிறீலங்கா அரசின் இன அழிப்பில் இவரின் தாயார் மரணமடைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.