கோவிட்-19 – பிரித்தானியா பிரதமர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் (55) உடல் நிலை மோசமடைந்துள்ளதால் அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரித்தானியா பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வெஸ்ற்மினிஸ்ரர் பகுதியில் உள்ள சென் தோமஸ் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வைதியசாலைக்கு அதிக பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் இடத்திற்கு தற்காலிகமாக வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ரப் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரசின் தொற்றுதலுக்கு பிரதமரின் மனைவியான கேரி சைn-மான்ட்ஸ்யும் உட்பட்டுள்ளார். அவர் கர்ப்பமாக உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியா பிரதமர் குணமடைய வேண்டும் என பிரித்தானியா அரசியல்வாதிகளும், உலக அரசியல் தலைவர்களும் தமது செய்திகளை பிரித்தானியா அரசுக்கு தெரிவித்துவருகின்றனர்.