கோவிட்-19- சிறீலங்காவில் 2 இலட்சம் பேர் வேலை இழப்பு

கோவிட்-19 தொற்று நோய்காரணமாக சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளால் தனியார்துறைகளில் பணியாற்றிய 2 இலட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக சிறீலங்கா பணியாளர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்கா இன்று (30) தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கை எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் 10 தொடக்கம் 15 இலட்சமாக அதிகரிகலாம். எனவே அதனை சமாளிப்பதற்கு அரசு 300 பில்லியன் நிதியை ஒதுக்க வேண்டும். இல்லையெனில் மிகப்பெரும் நெருக்கடியை தொழிலாளர்கள் சந்திப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.