கோவிட் 19 காரணமாக 2மில்லியன் பேர்  உயிரிழக்கலாம்!- WHO

கொரோனாவிற்கான தடுப்பு மருந்து பரவலாகப் பயன்படுத்தப்படும் சூழ்நிலை உருவாவதற்கு முன்னர் கோவிட் 19 காரணமாக 2மில்லியன் பேர் கொரோனாவினால் உயிரிழக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

நாங்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில், நாங்கள் தெரிவிக்கும் 2 மில்லியன் என்பது கற்பனை செய்து பார்க்க முடியாதது இல்லை, துயரம் தரும் வகையில் அது இடம்பெறலாம் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவரச சூழ்நிலைக்கான தலைவர் மைக்ரயன் தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா அதிகமாகப் பரவி வருவதற்கு  இளையவர்களை குற்றம்சாட்டக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.