கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கு மேல் உயர்ந்தது

கொரோனா வைரசின் தாக்கத்தினால் உலகில் உள்ள நாடுகள் அதிக உயிர் மற்றும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருவது நாம் அறிந்ததே இந்த நிலையில், இதுவரையில் 100,371 பேர் பலியாகியுள்ளதுடன், 1,652,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 339,937 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரித்தானியா ஆகியவை அடங்கும்.

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 980 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் 605 பேர் பலியாகியுள்ளதுடன், இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 570 பேர் மரணித்துள்ளனர். அமெரிக்காவில் சராசரியாக 2000 பேர் நாள் ஒன்றிற்கு மரணித்து வருவது குறிப்பிடத்தக்கது.