கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 108,480 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரசின் தாக்கத்தினால் உலகில் உள்ள நாடுகள் அதிக உயிர் மற்றும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருவது நாம் அறிந்ததே இந்த நிலையில், நேற்று (11) வரையில் 108,480 பேர் பலியாகியுள்ளதுடன், 1,774,063 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 401,500 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரித்தானியா ஆகியவை அடங்கும். பிரித்தானியாவில் 9,875 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் 16,606 பேர் பலியாகியுள்ளதுடன், இத்தாலியில் 19,468 பேர் மரணித்துள்ளனர். பிரான்ஸ் இல் 13,832 பேர் பலியாகியுள்ளனர், அமெரிக்காவில் 20,469 பேர் பலியாகியுள்ளதுடன், அங்கு நாள் ஒன்றிற்கு ஏறத்தாள 2,000 பேர் மரணித்து வருவது குறிப்பிடத்தக்கது.