கோத்தபாயா ஜனாதிபதியாக இல்லாத போது வழக்குத் தொடரலாம்-அமெரிக்க நீதிமன்றம்

கோத்தபாயா ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகிக்காத காலத்தில் அவருக்கெதிரான வழக்கை தொடர முடியும் என லசந்த விக்கரமதுங்கவின் மகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்க நீதிமன்றம் கோத்தபாயா ராஜபக்ஸவிற்கு எதராக வழக்குத் தொடர முடியாது எனத் தெரிவித்த தீர்ப்பிற்கு எதிராக அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அஹிம்சா விக்ரமதுங்க தொடர்ந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டது.

அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றில் அஹிம்சா விக்ரமதுங்க சார்பில் இவ் வழக்குத் தொடர்பாக நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான மையம் வாதிட்டது. இத் தீர்ப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்த அஹிம்சா விக்ரமதுங்க இதுவொரு வெற்றியென்றும் கோத்தபாயா ராஜபக்ஸவிற்கான செய்தியென்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது கோத்தபாயா ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றமை பொறுப்புக் கூறலை தாமதப்படுத்துமே அன்றி தடுக்க முடியாது எனவும் அவரால் பாதிக்கப்பட்ட எம் போன்றவர்கள் நீதிக்காக போராடுவதை ஒருபோதும் கைவிடப்போவதிலலையென அஹிம்சா விக்ரமதுங்க மேலும் தெரிவித்தார்.

லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக இதுவரை இலங்கை அரசு ஏற்கனவே அல்லது மறுதலிக்கவோ இல்லையென இவ் வழக்கில் வாதாடிய நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான மையத்தின் சட்டப் பணிப்பாளர் காமன் செயுங் தெரிவித்தார்.

அஹிம்சா விக்ரமதுங்க இவ் வழக்கை மீண்டும் தொடர முடியும் என்பது குறித்து திருப்தி அமைகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.