கோத்தபயாவிற்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் எதற்காக ? – வைகோ விளக்கம்

இலங்கை ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வை.கோபாலசாமி டெல்லியில் கறுப்புக் கொடிப் போராட்டம் ஒன்றை நிகழ்த்தியிருந்தார். இந்த போராட்டம் எதற்காக என்பது குறித்து அவர் விளக்கம் அளித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இலங்கை ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ, முன்பு பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த போது ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி ஆவார். அப்போது அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்தார். அவர்தான் இனப்படுகொலைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

Untitled கோத்தபயாவிற்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் எதற்காக ? -	வைகோ விளக்கம்

2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி, இந்தியப் பிரதமராகப் பதவி ஏற்ற விழாவிற்கு, மகிந்த ராஜபக்ஸவிற்கு அழைப்பு விடுதிருந்தார். அதை எதிர்த்து மதிமுக, இதே நாடாளுமன்ற வீதியில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானோம். ஈழத் தமிழர் படுகொலை குறித்து துளி அளவும் கவலை இன்றி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்குச் சென்று கோத்தபயா ராஜபக்ஸவை, இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றார்.

இது ஈழத் தமிழர்களின் நெஞ்சங்களில் எரிகின்ற தீயில், மேலும் பெற்றோல் ஊற்றுகின்ற செயலாகும். ஐ.நா சபை அளித்துள்ள ஆய்வு அறிக்கையின்படி, 2009ஆம் ஆண்டு மட்டும் ஒரு இலட்சத்து 37ஆயிரம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தாய்மார்களும் சகோதரிகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. மருத்துவமனைகள் மீது இலங்கை வான்படை குண்டுகளை வீசியது, தரைப்படை பீரங்கித் தாக்குதல் நடத்தியது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தவர்கள் கொல்லப்பட்டார்கள். பள்ளிக் கட்டிடங்களை இடித்து தகர்த்தார்கள்.

அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தலில், ஈழத் தமிழர்கள் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். எனவே, நான் சிங்கள மக்களின் ஆதரவால் தான் வெற்றி பெற்றேன் என்று கோத்தபயா ராஜபக்ஸ அறிவித்தார். பதவி ஏற்றவுடன் முதல் வேலையாக அவர் பிறப்பித்த உத்தரவில், ஈழத் தமிழர்கள் வசிக்கின்ற தெருக்களில் இலங்கை இராணுவம் துப்பாக்கி ஏந்தி வலம்வர வேண்டுமென அறிவித்திருக்கின்றார்.

ஏற்கனவே ஈழத் தமிழர்கள் வசிக்கின்ற பகுதிகள், சிங்கள இராணுவத்தின் சித்திரவதைக் கூடமாக, கொலைக் களமாக ஆக்கப்பட்டிருக்கின்றது. 2008ஆம் ஆண்டு, சன்டே லீடர் என்ற ஆங்கில நாளிதழின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதை அனைவரும் அறிவர்.

தான் இறப்பதற்கு முன்பு அவர் எழுதிய தலையங்கதில், மகிந்த ராஜபக்ஸவால் நான் கொல்லப்படுவேன் என்று எழுதியிருந்தார். கோத்தபயா ராஜபக்ஸ நிகழ்த்திய படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காக நிசாந்த சில்வா என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். அவர் அந்தப் பொறுப்பிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். எனவே அவர் காவல்துறை ஆணைத்தையும் நீதிமன்றத்தையும் அணுகி அதே பொறுப்பில் நீடித்தார்.

கோத்தபயா ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், நிசாந்த சில்வா அவரது மனைவி, மூன்று பெண் மகள்கள் இலங்கையை விட்டு வெளியேறி விட்டனர். இப்போது அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. இலங்கையில் உள்ள சுவிற்சர்லாந்து நாட்டு தூதரகத்தின் ஒரு பெண் அதிகாரி, கோத்தபயா ராஜபக்ஸவின் வெள்ளை வான் குண்டர்களால் கடத்தப்பட்டிருக்கின்றார்.

ஈழத் தமிழர்கள் இனப்படுகொலையின் போது இந்த வெள்ளை வான் ஒரு கொலைக் கருவியாக செயற்பட்டது. அந்தப் பெண் அதிகாரி எங்கோ ஓரிடத்தில் விசாரிக்கப்படுவதாக நியூயோர்க் ரைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற ரொய்ட்டர் செய்தி நிறுவனம், தங்களின் செய்தியாளர்களை இலங்கையிலிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டது. கோத்தபயா ராஜபக்ஸவின் மிரட்டலால், தினப்புயல், தமிழர் தளம் ஆகிய இரண்டு செய்தித் தாள்கள் நிறுத்தப்பட்டு விட்டன.

அது மட்டுமல்ல, லேக் ஹவுஸ் என்ற சிங்கள, ஆங்கிலம், தமிழ் செய்தித் தாள்களை வெளியிடுகின்ற இலங்கையின் பெரிய செய்தி நிறுவனம். தமிழ் செய்தித் தாள்களை நிறுத்துவதாக அறிவித்து விட்டது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றார்கள். கடந்த 30 ஆண்டுகளில் 580 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுடைய படகுகளைப் பறிமுதல் செய்து, பிடிபட்ட மீனவர்களை இலங்கைச் சிறைகளில் அடைத்துள்ளனர்.

ஆனால், இலங்கை அரசாங்கத்தோடு இந்திய அரசு கொஞ்சிக் குலாவுகின்றது. இது தமிழர்களுக்கு எதிரான அநீதி ஆகும். இப்போது இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள் மிரட்டலுக்கும் அச்சத்திற்கும் வேதனைக்கும் ஆளாகி உள்ளனர். அவர்களுடைய துயரத்தை உலகிற்கு எடுத்துரைக்கவும், கோத்தபயா ராஜபக்ஸவை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்த இந்திய அரசாங்கத்தைக் கண்டிக்கவும் நாங்கள் இந்தக் கறுப்புக் கொடிப் அறப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

எங்களுடைய முதன்மையான கோரிக்கை, ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளிகளை, பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.

90,000 ஈழத் தமிழ்ப் பெண்கள் இப்போது தங்கள் கணவர்களை இழந்து கண்ணீர் சிந்துகின்றனர். காணாமல் போன பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

எனவே ஐ.நா.சபை, மனித உரிமைகள் ஆணையம், தமிழ் ஈழம் அமைப்பதற்காக, ஈழத் தமிழர்களிடையே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற ஈழத் தமிழர்கள் அனைவரும், அந்தப் பொது வாக்கெடுப்பில் வாக்களிக்க வகை செய்ய வேண்டும்.” என வைகோவின் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய – இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சி புனேயில்

3 1 கோத்தபயாவிற்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் எதற்காக ? -	வைகோ விளக்கம்

இந்திய – சிறிலங்கா இராணுவத்தினரை உள்ளடக்கிய கூட்டு இராணுவப் பயிற்சியான மித்திர சக்தி – VII எனும் இராணுவப் பயிற்சியானது இந்தியா புனேயில் நடைபெறவுள்ளது.

இந்திய புனே பிரதேசத்தில் உள்ள குமாஒன் படைமுகாமில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை(01.12) இந்திய சிறிலங்கா இராணுவத்தினரின் மித்திர சக்தி – VII பயிற்சியில் சிறிலங்கா இராணுவத்தின் கெமுனு ஹேவா படையணியின் 120 படையினர் மற்றும் இந்திய இராணுவ குமாஒன் படைத் தலைமையக படையினர் பங்குபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறிலங்கா படையினரில் 11 அதிகாரிகள் மற்றும் 109 படையினர் உள்ளடங்கியுள்ளனர்.

2012ஆம் ஆண்டு முதல் இப்படை கூட்டுப் பயிற்சி நடைபெற்று வருகின்றது. மூன்று தடவைகள் இந்தியாவிலும், மூன்று தடவைகள் இலங்கையிலும் இதுவரை நடைபெற்றுள்ளது. ஏழாவது தடவையாக நடைபெறும் இந்தப் பயிற்சியானது இருவார காலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இந்தப் பயிற்சியின் போது படைகளின் இயங்கு தன்மை, இராணுவ ஒத்துழைப்பு கூட்டு தந்திரோபாய நடவடிக்கைகள், இராணுவ அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளல் மற்றும் எதிர்காலத்தில் எவ்வாறான பாதுகாப்பு அச்சுறுத்தலக்ளையும் எதிர்கொள்ளல் போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

4 கோத்தபயாவிற்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் எதற்காக ? -	வைகோ விளக்கம்

இம்முறை நடைபெறவுள்ள பயிற்சியில் இராணுவ அணுகுமுறை அனுபவங்கள், காலாட்படையணி அணுகுமுறை, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை முறைகள், நீண்டதூர ரோந்து நடவடிக்கைகள், சிறிய குழுக்களாக செயற்படும் நடவடிக்கை முறைகள், காலாட் படையணி ஆயுத முறைகள், பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் உத்திகள், ஸ்னைப்பர் முறைகள், தற்கொலைத் தாக்குதல்கள், தொழில்நுட்ப உத்திகள் என்பன பற்றிய பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

இந்த கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா இராணுவத்தின் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டலின் கீழ் இராணுவ காலாட் படையணி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் மனோஜ் முத்தநாயக்க மற்றும் அவர்களுடன் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவின் தலைமையில் இப்பயிற்சி ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்பயிற்சியில் மூத்த ஒருங்கிணைப்பாளராக மற்றும் கண்காணிப்பாளராக கேணல் பாதிய முதன்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன் மேஜர் ருவான் எதிரிசிங்க பயிற்சிகளின் நடத்துனராக பணியாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.