கொழும்பு – கண்டி (A 1) வீதியில் பாதுகாப்பு அதிகரிப்பு

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பஸ்யால பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பெருமளவு இராணுவத்தினரும், காவல்துறையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சந்தியிலுள்ள புத்தர் சிலையொன்று சேதப்படுத்தப்பட்டதையடுத்து, இன்று (05) றம்ழான் பெருநாள் அனுஸ்டிக்கப்படுவதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் கிடைக்கவில்லை.

மாவனல்ல பிரதேசத்தில் புத்தர் சிலையொன்று சேதமாக்கப்பட்டதையடுத்து, முஸ்லிம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.