கொழும்பில் தங்கியிருப்போர் தம்மை பதிவு செய்ய வேவண்டும்: பொலிஸ் அறிவிப்பு

கொழும்பு மாநகரம் மற்றும் புற நகரங்களில் தற்காலிகமாக வசிப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யவேண்டும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. தேசிய பாதுகாப்பில் ஓர் அங்கமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக கொழும்பு மாநகரம் மற்றும் புறநகர்களில் வெளிமாட்டத்தைச் சேர்ந்த பலர் தற்காலிகமாகத் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.