கொழும்பிலேயே அதிக கொரோனா நோயாளிகள்

கொரோனா தொற்றிற்கு உள்ளானவர்கள் அதிகமாக உள்ள மாவட்டமாக கொழும்பு மாவட்டம் இனங்காணப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி கொழும்பில் 42 பேரும், புத்தளத்தில் 27பேரும், களுத்துறையில் 25பேரும், கம்பகாவில் 11பேரும், யாழ்ப்பாணத்தில் 7பேரும், கண்டியில் 6பேரும், இரத்தினபுரியில் 3பேரும் குருநாகலில் 2பேரும், காலி, கேகாலை, மட்டக்களப்பு மற்றும் பதுளை, மாத்தறை ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் 35 பேரும் அடங்குவதாகவும் இதில் 3பேர் வெளிநாட்டவர்கள் உள்ளடங்குவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.