இலங்கையில் கொரோனா தொற்று பரிசோதனை அறிக்கைகளில் குறைபாடுகள்

கொரோனா தொற்று குறித்து இதுவரை முன்னெடுக்கப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை அறிக்கைகளில், 13 அறிக்கைகளில் குறைபாடுகள் காணப்படுவதாக,மருத்துவ ஆய்வக வல்லுநர்களின் நிறுவனம்இலங்கை அரச மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் (The Sri Lanka Association of Government Medical Laboratory Technologists)தெரிவித்துள்ளது.

இவ்வாறு தவறான அறிக்கை வெளியிடப்பட்டமை குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளதாக, நிறுவனத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

தொற்றாளர்களாக உறுதிசெய்யப்பட்ட சிலருக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.