கொரொனாவைக் கட்டுப்படுத்த அவசரகாலச் சட்டம்? அரச உயர் மட்டம் ஆராய்வு

கொரொனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு முழு நாட்டையும் முடக்கும் விதத்தில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருக்கும் அரசாங்கம், மேலும் தீவிர நடவடிக்கைகளை எடுப்பதற்கு வசதியாக அவரசகாலச் சட்டத்தைப் பிறபபிப்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றது என ஊடகத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

அரசாங்க உயர் வட்டாரலிகள் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பிப்பதில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் குறித்து இன்று காலையில் தீவிர மந்திராலோசனையில் ஈடுபட்டிருந்ததாகவும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்புலத்தில், பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் அவரசகால விதிகளைப் பிறப்பிப்பதில் உள்ள விளைவுகள் குறித்து சட்டமா அதிபர் மற்றும் பாதுகாப்புத் தரப்போடு அரசு உயர் மட்டம் இன்று காலை தொடர்பு கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.