கேரளாவில் எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்திற்குள்ளானது

துபாயிலிருந்து கேரளாவிற்கு 191 பயணிகளுடன் வந்த எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்றதால் விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் இதுவரை 2பயணிகள் உயிரிழந்ததுடன், 40 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கேரளாவில் அதிக மழை பெய்து வருவதால், ஓடுபாதையிலிருந்து விமானம் விலகி விபத்திற்குள்ளாகியது. இதில் விமானம் துண்டு துண்டாக உடைந்தது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.