குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபயசேகரா அதிகாலையில் கைது

குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபயசேகரா சற்று முன்னர் கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டிலேயே அவர் இன்று காலை கைதானதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஏற்கனவே சேவையிலிருந்து அவர் இடைநிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.