குருநாகல் பகுதியில் மூன்று பள்ளிவாசல்கள் மீது அதிகாலையில் தாக்குதல்

குருநாகல் பகுதியில் உள்ள கின்னியம மஸ்ஜிதுல் ஜும்மா பள்ளிவாசல், மஸ்ஜிதுல் அப்ரார் துக்கியா, மஸ்ஜிதுல் ஆயிஷா துக்கிய ஆகிய பள்ளிவாசல்கள் மீது சிங்கள இனத்தவர்கள் இன்று (13) அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறீலங்காவில் கடந்த மாதம் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லீம் மக்கள் மீது சிங்கள இனத்தவர்கள் பல இடங்களில் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர்.

இதனிடையே நேற்று (12) குளியப்பிட்டியா, பின்கிரியா மற்றும் துமலசூரியா ஆகிய பிரசேதங்களில் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து சிறீலங்கா காவல்துறையினர் அங்கு ஊரடங்கு உத்தரவுகளை இன்று (13) காலை வரை பிறப்பித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.