குண்டுத் தாக்குதல் சந்தேகநபர்களின் ரூ. 600 கோடி சொத்து முடக்கப்படும் – சிறிலங்காவின் காவல்துறை பேச்சாளர்

குற்றவியல் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி.) இந்தச் சொத்துக்கள் பற்றிய தகவல்களைக் கண்டுபிடித்திருப்ப தாகவும், அவற்றை உரிய நேரத்தில் முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் சிறிலங்காவின் காவல்துறை  பேச்சாளர்  கூறினார்.

13கோடி 40 லட்சம் ரூபா மதிப்புள்ள 41 சந்தேக நபர்களின் 100 இற் கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் ஏற்கனவே சி.ஐ.டியால் முடக்கப்பட் டன. அதே நேரத்தில் இரண்டு கோடி ரூபா சந்தேக நபர்களின் வசம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 293 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 115 பேர் விளக்கமறிய லில் வைக்கப்பட்டுள்ளனர்.

178 பேர் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்படுகிறா ர்கள். தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில், 62 பேரை சி.ஐ.டி, 47 பேரை பயங்கரவாத புலனாய்வு பிரிவு, 41 பேரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு, 16 பேரை அம்பாறை காவல்துறை  , மவுண்ட்லவேனியா மற்றும் கொழும்பு தெற்கு பொலிஸில் தலா நான்கு பேர், நுகேகொடாவில் மூன்று மற்றும் கண்டியில் ஒருவர் எனத்தடுத்து வைத்து விசாரிக்கிறது. – என்று அவர் மேலும் தெரிவித்தார்.