Home செய்திகள் குண்டுதாரிகளுக்கு ஆயுதப் பயிற்சி,பரப்புரைகளில் உதவியவர் கைது

குண்டுதாரிகளுக்கு ஆயுதப் பயிற்சி,பரப்புரைகளில் உதவியவர் கைது

உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் முதன்மைச் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் பரப்புரைகள் மற்றும் ஆயுதப் பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து வழங்கிய தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவுநர் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை காவல்துறை ஊடகப் பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் குற்றவியல் விசாரணைப் பிரிவினர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.

கடந்த மாதம் சட்டத்தரணி ஹிஸ்புல்லா, ரிசாத் பதியூதீனின் சகோதரர் உள்பட 5 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சஹ்ரான் ஹாசிமின் பரப்புரைகள் மற்றும் ஆயுதப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்து வழங்கிய தன்னார்வதொண்டு நிறுவன நிறுவுனரான கல்பிட்டியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.