குடத்தனை பகுதி இன்று பகல் சுற்றிவளைத்துத் தேடுதல்; இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது

மூன்று வாகனங்களில் சென்று வடமராட்சி கிழக்கு, குடத்தனைப் பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கு பரவலாகத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட்ட நிலையில், இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றது.

இந்தநிலையிலேயே இந்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், அவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இந்த இளைஞர்கள் அண்மையில் குடத்தனையில் பொலிஸாரும் மக்களும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக்கொண்ட முறுகல் சம்பவம் இடம்பெற்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.