கிழக்கு மற்றும் மேல் மாகாணத்திற்கு புதிய ஆளுநர்கள்

பதவி விலகிய ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் இடத்திற்கு புதிய நியமனங்கள் செய்யப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

மேல் மாகாண ஆளுநராக முன்னாள் கொழும்பு மாநகரசபை மேயர் A.J.M. முஸம்மில், கிழக்கு மாகாண ஆளுநராக சு.க.யின் முன்னாள் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச ஆகியோர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.