கிளிநொச்சி பாடசாலைகளுக்கு ஜப்பான் நிதியுதவி

கிளிநொச்சியிலுள்ள பாடசாலைக் கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கத்தின் மனித பாதுகாப்பு செயற்திட்டங்களுக்கான நிதியுதவியின் ஊடாக 86,358 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

சிறிலங்காவிற்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா மற்றும் மனிதநேய அபிவிருத்தி நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் ஜேசுராஜா அமிர்தராஜ் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.