கியூபாவில் ஒரு கிராமத்தை புனரமைக்கும் சிறிலங்கா

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கியூபாவில் ஏற்பட்ட சூறாவளியால் ஹவநாஹி –ரெக்லாவிற்கு அண்மையில் உள்ள கிராமம் முற்றாக சேதமுற்றது. இந்தக் கிராமத்தை மீளமைப்புச் செய்வதற்கு   50,000 அமெரிக்க டொலர் நிதியுதவியை அன்பளிப்பாக வழங்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இரண்டு அரசாங்கங்களின் நல்லுறவை மேலும் விஸ்தரிப்பதற்காகவும், இரு நாடுகளுக்குமிடையிலான உறவு தொடங்கி 60 வருட பூர்த்தியை முன்னிட்டும் இந்த நன்கொடை வழங்கப்படுவதாக சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன முன்வைத்த இந்த யோசனைக்கு அமைச்சு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சிறிலங்காவில் எவ்வளவோ கிராமங்கள் வசதிகள் அற்றதாக இருக்கும் போது, கியூபாவில் உள்ள கிராமத்திற்கு இந்த உதவியை அன்பளிப்பாக வழங்க சிறிலங்கா அரசு முன்வந்திருப்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியதொன்றாக உள்ளது.