கிடாச்சூரி அம்மன் ஆலய சபையினரால் மக்களுக்கான உதவிகள் வழங்கல்

வவுனியா கிடாச்சூரி கண்ணகை முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச் சபையினரால் கடந்த சில தினங்களாக கொரோணா வைரஸ் பாதுகாப்பு நடைமுறை காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் தொழிலுக்குச் செல்ல முடியாது கஷ்டப்படும் மக்களுக்காக அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அவர்களின் விடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டது.

மறவன்குளம், ஈஸ்வரிபுரம், தரணிக்குளம், பூம்புகார், கல்மடு, சாளம்பன், முல்லைக்குளம், கோதண்டர் நொச்சிக்குளம், சுந்தரபுரம், புதுக்குளம், அம்மிவைத்தான் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த அன்றாடம் தொழில் செய்து வாழும் மக்கள் கொரோணா வைரஸ் காரணமாக ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருப்பதால் தமது அன்றாட உணவுத் தேவையை நிர்த்தி செய்வதில் பெரும் சிரமங்களை எதிர் கொண்டிருந்தனர்.

இவர்களுக்காக மனிதாபிமானத்துடன் வவுனியா கிடாச்சூரி கண்ணகை முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச் சபையினரால் அரிசிஇ கோதுமை மாஇ சீனிஇ பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டது.

இச்செயற்பாட்டில் கிடாச்சூரி கிராமத்தைச் சேர்ந்த மக்களும் மற்றும் இளைஞர்களும் அத்துடன் வவுனியா வடக்கு கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர்கள்இ கோட்டக் கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோரும் தமது பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

மேலும் இவ்வாறான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தேவைப்படுவோர் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 0766975042, 0776891688. அத்துடன் இப்பணிக்கு உதவி வழங்க விரும்புவோரும் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

IMG 4969 கிடாச்சூரி அம்மன் ஆலய சபையினரால் மக்களுக்கான உதவிகள் வழங்கல்

IMG 4971 கிடாச்சூரி அம்மன் ஆலய சபையினரால் மக்களுக்கான உதவிகள் வழங்கல்

IMG 4976 கிடாச்சூரி அம்மன் ஆலய சபையினரால் மக்களுக்கான உதவிகள் வழங்கல்

IMG 4981 கிடாச்சூரி அம்மன் ஆலய சபையினரால் மக்களுக்கான உதவிகள் வழங்கல்