கனடாவில் வெடிபொருட்களுடன் இருவர் கைது

அமெரிக்காவின் எல்லைப் பாதுகாப்பு படையினர் வழங்கிய தகவல்களைத் தொடர்ந்து கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள றிச்மன்ட் கில் பகுதியில் முஸ்லீம் இனத்தவர்கள் இருவரை கனேடிய காவல்துறையினர் நேற்று (14) கைது செய்துள்ளனர்.

அவர்களின் வீட்டில் இருந்து வெடிமருந்துகளும், அதனை வெடிக்க வைக்கும் டிற்டனேற்ரர்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக யோர்க் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மஹயர் முகமடிசல் (18) மற்றும் அவரின் தந்தையான றிசா முகமடிசல் (47) ஆகியோரை கைது செய்யப்பட்டவர்கள். கைது நடவடிக்கையின் போது அவர்களின் இடத்திற்கு அருகில் உள்ளவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்கான வெளியேற்றப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.