கடத்தலுடன் தொடர்புடையவருக்கு பதவி உயர்வு வழங்கிய கோட்டா அரசு

கடற்படை முன்னாள் ஊடகப் பேச்சாளரான கொமாண்டர் டி.கே.பி.தசநாயக ரியர் அட்மிரல் ஆக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

2019 டிசம்பர் 11ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளரான டி.கே.பி.தசநாயக கொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் செய்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது