ஒரு வார பயணமாக நாளை இந்தியா செல்லும் ரணில்; குருவாயூர் கோவிலிலும் தரிசனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளாரென தெரிகிறது.

பெங்களூரில் நடக்கும் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளச் செல்லும் ரணில் அது முடிந்த பின்னர் குருவாயூர் கோவிலுக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளார்.

பெங்களூரில் ரணில் கலந்து கொள்ளும் நிகழ்வில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , பிரபல கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்து பத்திரிகை நடத்தும் இந்த நிகழ்வில் கடந்த வருடம் பிரதமர் மஹிந்த கலந்து கொண்டிருந்தார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் ரணில் இந்தியா செல்வது குறிப்பிடத்தக்கது.