ஐ.நா. வாகனங்கள் தொடர்பாக வெளிவந்த செய்திகளில் உண்மையில்லை – சிறீலங்கா இராணுவம்

.நா. சபை இலட்சினை பொறிக்கப்பட்ட வாகனங்கள், மாலி இராச்சியத்தில் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு அனுப்புவதற்காக தயாரித்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரட்ண தெரிவித்துள்ளார்.

குறித்த தகவல்கள் தொடர்பாக சமூகவலைத் தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் தொடர்பாக ஊடகங்களின் வினாக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேற்படி தெரிவித்தார்.

அந்த வாகனங்கள், மாலி இராச்சியத்தில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு அனுப்பி வைப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதை பரீட்சித்த போது புகைப்படம் எடுக்கப்பட்டு, அவை முகநூல் ஊடாக பரப்பப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

வாகனங்கள் வேறிடத்திலிருந்து கொண்டு வரப்படவில்லை என்றும், இராணுவத்தினரிடமிருந்த ஒரு ரக வாகனங்களே புதுப்பிக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே இத்தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.