ஐ.நா பிரதிநிதிகளாலும் தீர்வு சொல்ல முடியாத கேப்பாபிலவு மக்கள் பிரச்சினை

இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாபிலவு மக்களை, அங்கு சென்றுள்ள ஐ.நா. சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழு பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடி அவர்களின் பிரச்சினை தொடர்பாக கேட்டறிந்தனர்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மக்கள், ஐ.நா. பிரதிநிதிகள் தம்மை சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்ததாகவும், அதற்கான தீர்வை தம்மால் உடனடியாக எடுக்க முடியாததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி எமக்கு தீர்வைப் பெற்றுத் தருவதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் கூறிச் சென்றதாகவும் கூறினர்.

kepapulavu 2 ஐ.நா பிரதிநிதிகளாலும் தீர்வு சொல்ல முடியாத கேப்பாபிலவு மக்கள் பிரச்சினை