ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம்பெறவுள்ள 2021 -2022 ஆண்டில் உறுப்பினராக இருக்கும் தேர்தலில் இந்தியாவிற்கு வெற்றி கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.

193 உறுப்பு நாடகளைக் கொண்ட ஐ.நா. பொது அவை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர்கள், பொருளாதார மற்றும் சமூக சேவை உறுப்பினர்கள் ஆகியோரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்களை நடத்துகின்றது.

உலகில் நடைபெறும் கொரோனா அச்சம் காரணமாக இத் தேர்தல்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

இதற்கமைவாக 2021 -2022 காலகட்டத்திற்கான நிரந்தரமற்ற உறுப்பினர் பொறுப்பை இந்தியா வகிக்கவுள்ளது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 55 நாடுகளும் இந்தியாவின் தேர்வை ஆதரிக்கின்றன. இந்தக் குழுவில் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.