ஐதேக வினரும் இளைஞர்களை தேடித் தேடி கொலை செய்தவர்களே – மஹிந்த

கடந்த காலங்களில் இளைஞர்களை தேடித் தேடி கொலை செய்தவர்களுக்கும், சித்திரவதை செய்தவர்களுக்கு அன்று முறையான தண்டனை வழங்கியிருந்தால், இந்த அரசாங்கத்தைக் கொண்டு நடாத்த தலைவரும் அமைச்சர்களும்  இருந்திருக்க மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

நேற்று (24) மாலை கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணியின் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

பட்டலந்த சித்திரவதை முகாம் 1989 ஆம் ஆண்டுகளில் அம்பிலிப்பிட்டியவிலிருந்து பட்டலந்தை வரை பல இடங்களில் சித்திரவதை முகாம் இருந்ததை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தக் கால கட்டத்தில் தான் மனித உரிமைகள் என்ற வார்த்தையை முதன் முதலில் அறிமுகம் செய்தோம்.

சித்திரவதை பட்டவர்களும் அதற்கு எதிராக குரல் கொடுத்தவர்களும் இன்று ஓரணியில் திரண்டுள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.