சிறீலங்காவில் நேற்று இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலில் தோல்வி அடைந்ததால் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக பதவி விலகுவதாக சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.
வெற்றியீட்டிய கோத்தபாயவை தான் வாழ்த்துவதாகவும் தனக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி கூறுவதாகவும் அவர் இன்று (17) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.