ஏப்ரல் நடுப்பகுதியில் பொதுத் தேர்தல்: நிமல் சிறிபால டி சில்வா தகவல்

மார்ச் மாதம் 3ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக் கப்படும் எனவும், ஏப்ரல் நடுப் பகுதியில் பொதுத் தேர்தல் நடத் தப்படும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

“நாடாளுமன்றத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஓரணியில் நின்று போட்டியிடும். இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சு நடத்தியுள்ளார்” என்றார்.