எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து நாளைய தினம் கிழக்கிலும் கடையடைப்பு

எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து நாளைய தினம் கிழக்கிலும் கடையடைப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழ் மக்கள் பேரவையின் கிழக்குக் குழுவினரால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை மாநாடு ஜெனிவாவில் ஆரம்பித்துள்ள இந்த நேரத்தில்ää தங்களுக்கான நீதியை பெற்றுத்தருவதில் சர்வதேசத்திற்கும் பாரிய பங்குள்ளது என்பதினை சர்வதேசத்துக்கு இடித்துரைக்கும் வகையில் தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோசங்களை முன்வைத்து யாழ் மண்ணில் எதிர்வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமை ‘எழுக தமிழ்;’ எழுச்சிப் பேரணியினை தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

சிங்கள பௌத்த மயமாக்கல் நிறுத்தப்படல் வேண்டும்ää சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்படல் வேண்டும்ää தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படல் வேண்டும்ää வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை நடாத்தப்படல் வேண்டும்ää வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கல் நிறுத்தப்படல் வேண்டும்ää இடம் பெயர்ந்து அல்லல்படும் மக்கள் அனைவரும் அவர்களது சொந்த நிலங்களில் குடியமர்த்தப்படல் வேண்டும் என்பனவே அக்கோசங்களாகும்.

தமிழ் மக்கள் பேரவையின் கிழக்குக்குழு வடக்கு கிழக்கு தழுவியதாக தமிழர் தாயகமெங்கும் எழுக தமிழுக்கான ஆதரவு பல்வேறு தளங்களில் இருந்தும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ் ஆதரவுத்தளத்தினை ஒருங்கிணைத்து எழுக தமிழை பேரெழுச்சியுடன் முன்னெடுக்க ஏதுவாக வடக்கு கிழக்கு தழுவியதான பூரண கதவடைப்பிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

அத்தருணத்திலே ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு கிழக்கு மக்கள் தங்களது முழு ஆதரவினை தெரிவிக்குமுகமாகவும் பேரணியை வலுவூட்டுமுகமாகவும் அன்றைய தினம் கிழக்கு முழுவதிலும் பூரண கதவடைப்பினை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது